பொது மக்கள் சட்டத்தரணிகளிடம் தாம் பெற்றுக் கொள்ளும் சட்ட ஆலோசனைகளின் பொறுத்தப்பாடு குறித்து அறிந்துகொள்வது அத்திய அவசியமாகும்.
பொது மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குத் தீர்வு தேடி நீதிமன்றத்தை நாடுவதில் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவற்றுள் சட்டத்தரணிகளின் முறைகேடான சட்ட ஆலோசனைகள், சட்டத்தரணிகள் தமது வருமானத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு வழக்கை இழுத்துச்செல்வதற்கு ஏற்றதாக தகவமைத்தல், சட்டத்தரணிகள் வழக்கை இயன்றவரை இழுத்துச் செல்வது, மேலும் சட்டத்தரணிகளிடம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்ற தெளிவு பொதுமக்களிடம் இல்லாமை என்பன குறிப்பிடத்தக்க சில அவதானங்களாகும்.